வழிக்காட்டியைத் தவிர்

மாதாந்த தொகுப்புகள்:April 2008

அன்புகொண்ட அவளிடம்
நான் கொள்ளும் சிறு ஊடல்களில்
அவள் எனக்கு தரும்
தண்டனை அவளது மௌனம்,
எப்படி சொல்வேனடி
மரணத்தைவிட கொடியது
மௌனமென்று..

கடலலையில் கால்வைக்க மனமில்லாமல்
கடற்கரை மணலில் அமர்ந்தேன்,
உன் முகம்போன்ற வட்டநிலவின்
பிம்பம் கடல்நீரில் விழிந்ததால்.

காக்கை குருவிகளின் ரெக்கைகள் விரிந்தது
கூட்டிலிருக்கும் தன் குஞ்சுகள்
நனையாமல் பாதுகாக்க!

ஓடிவரும் வெள்ளத்தில் காகிதக்கப்பல் விட்டு
விளையாடத் துடித்தது சிறுவனின் உள்ளம்,
அதனை அணைப்போட்டுத் தடுத்தது
சமையலறையிலிருந்து வந்த அம்மாவின் திட்டுக்குரல்..

செல்லும் திசைதெரியாமல் தவித்தது
தன் கூட்டத்தை விட்டு
நீரில் அடித்துவந்த ஆட்டுக்குட்டி ஒன்று.

கண்களில் சோகத்துடன் சிலையாய் நின்றான்
தன் பயிர்கள் நீரில் மூழ்கியதைக் கண்ட
ஏழை விவசாயி ஒருவன்,

மின்சாரம் தடைப்பட்டு இருள்சூழ்ந்த தெருவில்
வெண்ணிலவின் ஒளியில் அங்குமிங்கும்
வீடுகளை இழந்த மக்கள் கூட்டம்,

இத்தனை இன்னல்களுக்கு நடுவிலும்
மழையை ரசித்தேன்,
கண்கள் நான்கும் மௌனமொழி பேசிக்கொண்டு
அவளின் விரல்பிடித்து நடந்ததால்!!

Follow

Get every new post delivered to your Inbox.